ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தமிழகத்தில் புதிதாக 5,017 பேருக்கு கரோனா; 5,548 பேர் குணம்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,017 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில்  71 பேர் பலியாகியுள்ளனர்.

News image

தமிழகத்தில் புதிதாக 5,017 பேருக்கு கரோனா; 5,548 பேர் குணம்

Updated On :6 அக்டோபர் 2020, 12:50 pm


சென்னை: சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,017 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில்  71 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவத் தொடங்கிய பிறகு, 39வது நாளாக தொடர்ந்து ஆறு ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய நாளில் 45,279 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தமிழகத்தைச் சேர்ந்த 5,014 பேருக்கும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 3,088 பேர் ஆண்கள், 1,929 பேர் பெண்கள்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 1,306 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 13-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,484 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களை விட அதிகமாக 5,548 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6.25 லட்சத்தில் இருந்து 6.30 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9,917 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் கரோனா பாதித்தவர்களில் இதுவரை 5,75,212 பேர் குணமடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.