
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 1,827 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 2,522 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு 7,14,235 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 695 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 1,97,077 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 1,827 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் 209 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 146 பேருக்கும் தொற்று உறுதி ஆகியுள்ளது.
மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.