தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு தொற்று உறுதி; ஒரேநாளில் 59 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.17, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.17, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 5,555.  வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 5 பேர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 5,25,420 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 992 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்றைய செய்திக் குறிப்பில், மேலும் 59 பேர் (அரசு மருத்துவமனை-36, தனியார் மருத்துவமனை -23) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 8,618 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று ஒரேநாளில் 5,524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,70,192 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 46,610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அதிகபட்சமாக 84,524 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 62,17,923 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

கரோனா பரிசோதனைக்காக அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 108 என மொத்தம் 174 பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com