சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி மீண்டும் 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளது.
அதில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி 10,012 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கரோனா பாதித்தவர்களில் 1,44,511 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,091 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக 10 ஆயிரத்துக்குள் இருந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது மீண்டும் 10 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் ஆயிரத்தில் இருந்த கரோனா பாதிப்பு ஆயிரத்து நூறுக்கு மேல் உயர்ந்துள்ளதும் இதற்குக் காரணமாக உள்ளது.
கோடம்பாக்கத்தில் 1,170 பேரும் அண்ணாநகரில் 1,115 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


