மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

நியாயவிலைக் கடையில் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்

சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள பகுதிகளில் தமிழகரசின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.

News image

காவேரிப்பட்டின ஊராட்சியில் உள்ள மோட்டூர் பகுதியில் வெள்ளிக்கிழமை டோக்கன் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை விற்பனையாளர். 

Updated On :1 ஜனவரி 2021, 5:03 pm IST


சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள பகுதிகளில் தமிழகரசின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள ரொக்கம் ரூ.2,500 உடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் பெறுவதற்கான டோக்கனை பொதுமக்களுக்கு வழங்கும் பணியில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகரசு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கம் ரூ.2,500 உடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பினை ஜனவரி 4ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அதனையடுத்து சங்ககிரி வட்டத்தில் உள்ள 48 முழு நேரமும், 87 பகுதி நேரக் கடைகள் உள்பட மொத்தம் 135 ரேஷன் கடைகளில்  பொருள்கள் வாங்கும் 73,000 பேருக்கு அரசு அறிவித்துள்ள ரொக்கம் மற்றும் பரிசு தொகுப்பினை வழங்குவதற்காக டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

வெள்ளிக்கிழமை சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட காவேரிப்ட்டி ஊராட்சியில் உள்ள வட்ராம்பாளையம், ஒக்கிலிப்பட்டி, தண்ணீர்தாசனூர், சென்றாயனூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருள்கள் பெற்றுவரும் 2 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர்கள் வீடுகளுக்குச் சென்று  டோக்கன் வழங்கும் பணிகளில் அந்தந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளுக்கே சென்று பணியாளர்கள் டோக்கன் வழங்கி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.