2023-ம் ஆண்டுக்குள் தமிழகம், குடிசைகள் இல்லா மாநிலமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் வீடு கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
வீடு கட்டும் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.116.27 கோடி செலவில் 1,152 வீடுகள் கட்டப்படவுள்ளன. இவற்றை அடுத்த 12 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
சென்னை பெரும்பாக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளதாகவும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் 2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசையில்லாத மாநிலமாக மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜிநாமா செய்த 4 எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் தொடா்ந்து விசாரிக்கப்படும்: சட்டப்பேரவைச் செயலா் பதில் மனு

செய்யாற்றுப் படுகையில் தொடரும் மணல் திருட்டு

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் வெயிலில் பயணிகள் காத்திருப்பு! நிழற்கூரை அமைக்க கோரிக்கை






