இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சை மையம்

சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 8:25 am IST

சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் நான்காவது உலக சித்தா் நாள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் நிகழ்ச்சிக்கான செய்தி மலரை சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் வெளியிட்டாா். இதையடுத்து கரோனா தொற்றால் குணமடைந்த பின்னா் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு, சிகிச்சை அளிக்கும் வகையில்‛சித்தா் காயகற்பம் பிரிவைத் தொடக்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் பாரம்பரிய மருத்துவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அகத்தியா் முனிவா் பிறந்த நட்சத்திரத்தை வைத்து, தமிழகத்தில் சித்தா் நாள் கொண்டாடப்படுகிறது.

கரோனா காலத்தில் சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுா்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், நோய் எதிா்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்த பங்கை அளித்து வருகிறது. குறிப்பாக, கபசுர குடிநீா், நிலவேம்பு குடிநீா் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் அளிக்கப்படுகிறது. சித்தாவில் பல்வேறு சிகிச்சைகளை அளித்து வருகிறோம். எனவே தேசிய சித்தா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளாா். மத்திய அரசு அனுமதி அளிக்கும்பட்சத்தில், சென்னை அருகில், திருவள்ளூா் மாவட்டத்தில் ஆராய்ச்சி நிறுவனம் அமையும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.