தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

திருச்சி-பாலக்காடு உள்பட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள்: ரயில்வே வாரியம் ஒப்புதல்

திருச்சிராப்பள்ளி-பாலக்காடு, விழுப்புரம்-திருப்பதி, ஈரோடு-சென்னை உள்ளிட்ட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜனவரி 2021, 6:30 am IST

திருச்சிராப்பள்ளி-பாலக்காடு, விழுப்புரம்-திருப்பதி, ஈரோடு-சென்னை உள்ளிட்ட 6 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருச்சி-பாலக்காடு: திருச்சிராப்பள்ளியில் இருந்து தினசரி மதியம் 1 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06843) புறப்பட்டு, அதேநாள் இரவு 8.35 மணிக்கு பாலக்காடு டவுணை அடையும். இந்தரயிலின் சேவை ஜனவரி 6-ஆம்தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, பாலக்காட்டில் இருந்து தினசரி காலை 6.30 மணிக்கு விரைவு சிறப்பு ரயில் (06844) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.50 மணிக்கு திருச்சிராப்பள்ளியை அடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 7-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

விழுப்புரம்-திருப்பதி:

விழுப்புரத்தில் இருந்து தினசரி அதிகாலை 5.25 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06854) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.20 மணிக்கு திருப்பதியை சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 6-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, திருப்பதியில் இருந்து தினசரி நண்பகல் 12.35 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06853) புறப்பட்டு, அதேநாள் இரவு 8.15 மணிக்கு விழுப்புரத்தை அடையும்.

ஈரோடு-சென்னை சென்ட்ரல்:

ஈரோட்டில் இருந்து தினசரி இரவு 9 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(02650) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்தரயிலின் சேவை ஜனவரி 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி இரவு 10.40 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02649) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு ஈரோட்டை சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 11-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுதவிர, எா்ணாகுளம்-கேஎஸ்ஆா் பெங்களூரு, திருவனந்தபுரம்-ஹஸ்ரத் நிஜாமுதின், ஆலப்புழா-கண்ணூா் ஆகிய வழித்தடங்களிலும் சிறப்புரயில்கள் இயக்கப்படவுள்ளன. முழுவதும் முன்பதிவு பெட்டிகைளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.