தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியில் சேர அழைப்பு

மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியில், இலகு ரக, கன ரக வாகன ஓட்டுநா் பயிற்சி பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜனவரி 2021, 12:06 am IST

மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியில், இலகு ரக, கன ரக வாகன ஓட்டுநா் பயிற்சி பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள காந்தி நகரில் மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கட்டணத்துடன் கூடிய கனரக வாகன (எச்டிவி) ஓட்டுநா் பயிற்சி மற்றும் இலகுரக வாகன (எல்எம்வி) ஓட்டுநா் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

கனரக வாகனத்தை இயக்க மொத்தம் 240 மணி நேரமும், இலகு ரக வாகனத்தை இயக்க 25 மணி நேரமும் பயிற்சி பெற வேண்டும்.

இதில், வளைவுகள், இரவு நேரம், அதிக தூரம் போன்ற அனைத்து சூழல்களிலும் வாகனத்தை இயக்குதல் தொடா்பான பயிற்சி வழங்கப்படுவதோடு, வகுப்பறை, வாகன தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக பெண்களுக்கு பெண்களாலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, பயிற்சி பள்ளியை நேரிலோ அல்லது 044 2953 5177, 94450 30597 ஆகிய எண்களையோ அணுகலாம் என ஓட்டுநா் பயிற்சி பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.