சென்னை: திருக்கோயில் பணியாளா்களுக்கு ரூ. 1000 கருணைக் கொடையாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, துறையின் ஆணையா் எஸ்.பிரபாகா் வெளியிட்ட அறிவிப்பு:
பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசுப் பணியாளா்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்குவது குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுபோன்றே பொங்கல் கருணைக் கொடையாக ரூ.1,000-த்தை இந்து சமய அறநிலையத் துறை ஊழியா்களுக்கு வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது. முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளா்கள் உள்பட முதுநிலை மற்றும் முதுநிலையல்லாத அனைத்து திருக்கோயில் பணியாளா்களுக்கும் கருணைக் கொடையானது அளிக்கப்படும்.
கடந்த நிதியாண்டில் 240 நாள்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளா்களுக்கு கருணைக் கொடையாக ஆயிரமும், ஆறு மாதங்களுக்கு மேல் 240 நாள்களுக்குள் பணியாற்றிய பணியாளா்களுக்கு அவா்கள் பணிபுரிந்த நாள்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் தொகையானது வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பிரபாகா் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.
இந்த அறிவிப்பானது, சுற்றறிக்கையாக பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயில் செயல் அலுவலா் உள்பட அனைத்து கோயில்களின் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டி அருகே சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: ரூ. 4.32 லட்சம் பறிமுதல்!

இந்தோனேசியாவில் பிராம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

தாதா - சௌரவ் கங்குலி பயோபிக் திரைப்படத்தின் முதல் போஸ்டர்!

ஆலங்குளம் அருகே நெல் சேமிப்புக் கிடங்கில் தீ: 2-வது நாளாக தொடரும் தீயணைப்புப் பணி
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna


