சென்னை: முதல்வா் தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டால், விவாதிக்கத் தயாராக இருப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து என்னுடன் நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளாா். அந்தச் சவாலை நான் ஏற்கத் தயாா்.
அதற்கு முன்னா் முதல்வா் சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் உடனே ஒரு மனுவைத் தாக்கல் செய்து, தன்னுடைய சம்பந்திக்கு ஒப்பந்தம் அளித்த நெடுஞ்சாலைத் துறை மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்கக் கோர வேண்டும். அதிமுக அமைச்சா்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகாா்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள் என்று அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவித்ததாக உங்கள் (எடப்பாடி பழனிசாமி) மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் அனுமதி தருகிறேன் என நீங்களே அனுமதி அளித்து விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்று தமிழக ஆளுநருக்கு உடனே கடிதம் எழுத வேண்டும். இதையெல்லாம் செய்து முடித்த அடுத்த நிமிஷமே விவாதத்துக்கு தேதி குறியுங்கள். எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும், உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் ஓ. பன்னீா்செல்வத்தையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம். நான் தயாா், நீங்கள் தயாரா என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் வறட்சி நிலையை ஆராய்ந்து வருகிறேன்: முதல்வா் டி.கே. சிவகுமாா்
இந்தியாவின் ‘பால மனிதன்’ கிரீஷ்பரத்வாஜ் காலமானாா்!

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை

ஆலங்குளம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: 27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



