பள்ளிகள் மூடியிருக்கும்போது திரையரங்குகளில் 100 சதவிகிதம் அனுமதிப்பது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று சூழலில் திரையரங்கில் 100 சதவிகிதம் முழுமையாக ரசிகர்களை அனுமதிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
திரையரங்கு விவகாரத்தில் குழந்தைகள் போன்று அரசு மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும்,
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி ஜனவரி 11-ஆம் தேதி வரை திரையரங்கில் 50 சதவிகித ரசிகர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் இயங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையே சேர்த்து விசாரிக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... சந்திரசேகரன் ஜோசப் விஜய் ஆகிய நான்...

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா்: சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமனம்

விருச்சிக ராசிக்கு உற்சாகம்: இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 10 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு தைரியம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

