வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

தமிழகத்தில் கரோனா சிகிச்சை, தடுப்பூசி பணிகள் திருப்தி: ஹர்ஷ் வர்தன்

தமிழகத்தில் கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பான பணிகள் மனநிறைவையும், திருப்தியையும் அளித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

News image

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Updated On :8 ஜனவரி 2021, 2:09 pm IST


சென்னை: தமிழகத்தில் கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பான பணிகள் மனநிறைவையும், திருப்தியையும் அளித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கரோனா தடுப்பூசி பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று மாநிலங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

தமிகத்தில் கரோனாவுக்கான சிகிச்சை சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சிகளை மூன்று இடங்களில் ஆய்வு செய்தேன். தடுப்பூசி பணிகள் திருப்திகரமாகவும், மனநிறைவையும் தருகிறது. கரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுளள்து என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.