தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

தமிழகத்தில் கரோனா சிகிச்சை, தடுப்பூசி பணிகள் திருப்தி: ஹர்ஷ் வர்தன்

தமிழகத்தில் கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பான பணிகள் மனநிறைவையும், திருப்தியையும் அளித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

News image

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Updated On :8 ஜனவரி 2021, 2:09 pm IST


சென்னை: தமிழகத்தில் கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பான பணிகள் மனநிறைவையும், திருப்தியையும் அளித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கரோனா தடுப்பூசி பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று மாநிலங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

தமிகத்தில் கரோனாவுக்கான சிகிச்சை சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சிகளை மூன்று இடங்களில் ஆய்வு செய்தேன். தடுப்பூசி பணிகள் திருப்திகரமாகவும், மனநிறைவையும் தருகிறது. கரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுளள்து என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.