சென்னை: சென்னை வந்திருக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சென்னையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்தார்.
பின்னர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில் பார்வையிட்டார். அப்போது மருத்துவப் பணியாளர்களிடமும் ஹர்ஷ் வர்தன் உரையாடினார்.
தமிழகத்தில் இன்று தொடங்கிய கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியை நேரில் ஆய்வு செய்த பின்னர், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கரோனா தடுப்பூசி மருந்துகளை வைக்க உருவாக்கப்பட்டுள்ள மருந்து கிடைங்கை ஆய்வு செய்தார்.
பின்னர், கரோனா தடுப்பூசி விநியோகம் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வுகளுக்குப் பின், தலைமைச் செயலகம் வந்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










