புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

பாளையம்பட்டி ஆசிரியர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிக் கல்லூரியில் 2004-2006ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

பாளையம்பட்டி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Updated On :9 ஜனவரி 2021, 2:44 pm IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிக் கல்லூரியில் 2004-2006ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை பாளையம்பட்டியில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் கடந்த 2004-2006ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது அக்கல்லூரியின் கணித விரிவுரையாளர் வெங்கிடசாமி மற்றும் கல்வித் தொழில்நுட்ப விரிவுரையாளர் அழகப்பன் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் சிறப்பு வரவேற்பு மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து அம்மாணவர்கள் நினைவாக அக்கல்லூரிக்கு பீரோ ஒன்று அம்மாணவர்கள் சார்பில் பரிசாக அளிக்கப்பட்டது. 

பின்னர் விரிவுரையாளர் வெங்கிடசாமி தனது சிறப்புரையில் பேசியபோது, 204-2006ம் கல்வியாண்டில்  பயின்ற மொத்தம் 50 மாணவர்களில் 36 பேர் ஆசிரியர் பணி மற்றும் பல்வேறு அரசுப் பணிகளில் தற்போது பணியாற்றுவது இக்கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது எனத் தெரிவித்தார். அதையடுத்து முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவராக மேடையில்  தம்மை அறிமுகம் செய்துகொண்டு, கல்லூரிக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு மனநெகிழ்வுடன் மகிழ்ச்சியடைந்தனர்.

தங்கள் வாழ்க்கை அனுபவங்களைக்கூறி, தற்போது இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர்கள் வாழ்க்கைக் கல்வியாக எடுத்துரைக்கவேண்டுமென விரிவுரையாளர்களுக்குத் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.