புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

சாலையோர வியாபாரிகளுக்கு சாலை ஓரத்திலேயே முகாமிட்டு வங்கிக்கடன் மேளா

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகள் பிழைப்பு நடத்தும் வைத்தீஸ்வரன் கோயில் கீழவீதி சாலையோரத்திற்கே நேரில் சென்று முகாம் அமைத்து திட்டம் பற்றி விழிப்புணர்வு நடத்தினர்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 3:03 pm IST

மயிலாடுதுறை மாவட்டம் - வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் உள்ள தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களை மற்றும் சுற்றுலாப் பயணிகளை நம்பி தலையில் சுமந்து விற்பனை செய்பவர்கள், சைக்கிளில் இளநீர் தேநீர் விற்பனை செய்பவர்கள், தரைக்கடைகளில் உப்பு மிளகு விற்பவர்கள் தற்காலிக கடைகளில் பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், தள்ளு வண்டிகளில் கடலை சுண்டல் விற்பனை செய்பவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.

வைத்தீஸ்வரன் கோயில் சாலையோர வியாபாரிகள் பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதி திட்டம் பற்றி போதிய  விழிப்புணர்வு இன்றி விண்ணப்பித்து பயன் பெறாமல் இருந்தனர். பேரூராட்சி அலுவலகம் வந்து வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கப் பலமுறை அறிவிப்பு செய்தாலும் தயக்கம் காட்டி வந்தனர்.

எனவே  வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி  நிர்வாகம் அதிரடியாக சாலையோர வியாபாரிகள் பிழைப்பு நடத்தும் வைத்தீஸ்வரன் கோயில் கீழவீதி சாலையோரத்திற்கே நேரில் சென்று முகாம் அமைத்து திட்டம் பற்றி விழிப்புணர்வு செய்து வங்கிக் கடன் விண்ணப்பங்கள் பெற்றனர்.

செயல் அலுவலர் கு.குகன் தலைமையில் நடைபெற்ற முகாமில் இளநிலை உதவியாளர் ப. பாமா வரவேற்றார் . சமுதாய அமைப்பாளர்  ரா. சிந்தியா விண்ணப்பம்  நிரப்ப கற்றுக் கொடுத்தார் . வரிதண்டலர் ஜெ.அமுதா நன்றி கூறினார். பேரூராட்சி பரப்புரையாளர்கள் சரண்யா , அபிராமி ஓட்டுநர் ஜெ.மணிவண்ணன் மற்றும் நா, சுப்ரமணியன், சபரிநாதன், பாஸ்கரன், முனியாண்டி , வனிதா , பிரவீன்  உள்ளிட்ட  பணியாளர்கள் சாலையோர வியாபாரிகளுக்கு விளக்கம் அளித்து விண்ணப்பங்கள் பெறும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.