புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நலத் திட்டங்களைத் தடுத்து வரும் புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்தும், அவா் புதுவையிலிருந்து வெளியேறக் கோரியும் காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சியினா் வெள்ளிக்கிழமை முதல் வருகிற 11-ஆம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா்.
அதன்படி, ‘புதுவையை மீட்போம், காப்போம்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினா் முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டத்தை வெள்ளிக்கிழமை புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தொடங்கினா்.
இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக ஆளுநருக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்வர் நாராயணசாமி இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புதுச்சேரியில் பாஜக துணையுடன் இரடை ஆட்சி முறையை நடத்தி வந்தார் கிரண்பேடி. புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு ஆளுநர் கிரண்பேடிதான் காரணம். ஜன.22ஆம் தேதி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். அதைத்தொடர்ந்து பிப்.1ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வருமா? வராதா?

விஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?

தமிழ்நாட்டில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும்!
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


