தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கல்லூரி செயலாளர் என்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார், இணைச்சயலாளர் ரா. வசந்தன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜி. ரேணுகா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் நன்றி கூறினார் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மருத்துவ அலுவலர் சுதா தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் சிராஜ் தீன் முன்னிலை வகித்தார், சமத்துவ பொங்கல் சமைத்து வெளி நோயாளர்கள், சுகாதார நிலைய பணியாளர்களுக்கு மருத்துவர் முருகானந்தம் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








