தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

திருப்பத்தூரில் மார்கழி இசைத் திருவிழா பரிசுகள் விநியோகம்

இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டலம் சார்பில் நடப்பெற்ற மார்கழி இசைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் விநியோகிக்கப்பட்டன.

News image

போட்டியில் பரிசுப் பெற்றவர்களுடன் இணை ஆணையர் செ.மாரிமுத்து.

Updated On :13 ஜனவரி 2021, 6:24 pm IST

இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டலம் சார்பில் நடப்பெற்ற மார்கழி இசைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வேலூர் மண்டல அளவில் 2021-ஆம் ஆண்டிற்கான மார்கழி இசைத் திருவிழா(பாவை விழா) போட்டி நடைபெற்றது. அதையொட்டி திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடும் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

இணைய வழியான போட்டி திங்கள்கிழமை வேலூரில் உள்ள நாராயண ரெட்டியார் சத்திரத்தில் நடைபெற்றது. இதில், ஆன்லைன் மூலம் நடைபெற்ற இப்போட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை என மூன்று வகை 147 மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த 36 மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் தருமராஜா கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் செ.மாரிமுத்து மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் மா.மாதவன்,அ.பிரியா உமேஷ் குமார் பங்கேற்றனர். முடிவில் அறநிலையத்துறை திருப்பத்தூர் ஆய்வாளர் ந.திலக் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.