பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்ட விசாரணையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்ட நில அளவீட்டுக்கான விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image

IDPL

Updated On :13 ஜனவரி 2021, 3:09 pm IST

திருப்பூர் மாவட்டத்தில் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்ட நில அளவீட்டுக்கான விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஐடிபிஎல் எண்ணெய் குழாய்  திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது

கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆகவே, இந்தத் திட்டத்தைச் சாலையோரமாகக் கொண்டு செல்லக்கோரி 6 மாவட்ட விவசாயிகள் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அந்தந்த மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் வருவாய்க் கோட்டாட்சியர், தெற்கு வட்டாட்சியர், காவல் துறை அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தமிழக அரசு ஐடிபிஎல் திட்டம் குறித்து மறு அறிவிப்பு வரும் வரையில் இந்தத் திட்டம் தொடர்பான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று வாய்மொழியாக உறுதியளிக்கப்பட்டது.

இதனிடையே, காங்கயம் வட்டம் படியூர், சிவன்மலை, கீரனூர், மறவாபாளையம் கிராம் விவசாயிகளை வரும் ஜனவரி 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இது அரசின் மீது விவசாயிகளுக்கு உள்ள நம்பகத்தன்மையைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐடிபிஎல் திட்ட அளவீட்டுக்கான விசாரணையை ரத்து செய்வதுடன், இந்தத் திட்டத்தைச் சாலையோரமாகச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.