உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் நெற்பயிர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு பாசன நீர் மூலமாக மாவட்டத்தில் 14 ,700 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது முதல் போக சாகுபடி நெற்பயிர் மாவட்டத்தின் பல இடங்களில் அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
ஆனால், உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி போன்ற பகுதிகளில் 2000 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெற்பயிர் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாத நெற்கதிர்கள் கீழே சாய்ந்து தண்ணீரில் மூழ்கி விட்டன.
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானே கோரிக்கை - டிரம்ப் தகவல்

நாளை ஆதிசங்கரா் வீதியுலா

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு

வெளியேறியது இந்திய மகளிர் அணி
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


