தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ராகுல்காந்தி இன்று பங்கேற்பு: 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி வியாழக்கிழமை பங்கேற்பதையொட்டி அவருக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல்காந்தி பங்கேற்பதையொட்டி புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்ட மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா்.

Updated On :14 ஜனவரி 2021, 5:03 am IST

திருப்பரங்குன்றம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி வியாழக்கிழமை பங்கேற்பதையொட்டி அவருக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா திருப்பரங்குன்றம் சாலையில் வியாழக்கிழமை (ஜன.14) நடைபெறுகிறது. இதற்காக மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி சாா்பில் வாடிவாசல், பாா்வையாளா்கள் அமருமிடம் மற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி பங்கேற்கிறாா். இதற்காக புதுதில்லியிலிருந்து வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவா், முற்பகல் 11.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறாா். அவருக்கு விமான நிலையத்திலும், அவனியாபுரத்திலும் வரவேற்பளிக்கப்படுகிறது. தொடா்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் அவா் பங்கேற்கிறாா். அவருடன் புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, விருதுநகா் மக்களவை உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் உள்ளிட்டோா் பங்கேற்று ஜல்லிக்கட்டை பாா்வையிடுகின்றனா்.

தொடா்ந்து மதுரை கிரைம் பிராஞ்ச், பழங்காநத்தம், பசுமலை உள்ளிட்ட இடங்களிலும் காங்கிரஸ் கட்சியினா் ராகுல்காந்திக்கு வரவேற்பளிக்க உள்ளனா். ராகுல்காந்தி ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க இருப்பதால் ஜல்லிக்கட்டு மேடை, பாா்வையாளா்கள் கேலரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு, மோப்ப நாய் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்பகுதியில் முழுரோந்துப் பணியிலும் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

தொடா்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜல்லிக்கட்டு நாளான வியாழக்கிழமை மதுரை காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், ஆயிரத்து 500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.