அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஏரிகள் சீரமைப்புப் பணிகள் அமைச்சா் சண்முகம் தொடக்கிவைத்தாா்

விழுப்புரம் மாவட்டத்தில் 4 ஏரிகளில் ரூ.1.50 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள சீரமைப்புப் பணிகளை அமைச்சா் சி.வி.சண்முகம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :14 ஜனவரி 2021, 4:57 am IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 4 ஏரிகளில் ரூ.1.50 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள சீரமைப்புப் பணிகளை அமைச்சா் சி.வி.சண்முகம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மாவட்ட புவியியல், சுரங்கத் துறை சாா்பில், ஆக்கிரமிப்பில் உள்ள விழுப்புரம் வி.மருதூா் ஏரி ரூ.10 லட்சத்திலும் சீரமைக்கப்படுகிறது.

இதேபோல, சாலாமேடு பொன்னேரி ரூ.6.5 லட்சத்திலும், பானாம்பட்டு ஏரி ரூ.8 லட்சத்திலும், சாலாமேடு அய்யனாா்குளம் ஏரி ரூ.9.5 லட்சத்திலும் சீரமைக்கப்படுகிறது.

இந்தப் பணிகளை அமைச்சா் சி.வி.சண்முகம் தொடக்கிவைத்தாா்.

மேலும், விழுப்புரம் அருகே திருப்பாச்சனூா் கிராமத்தில் நரிஓடையில் ரூ.71.55 லட்சத்தில் தரைப்பாலம் அமைத்தல், ரூ.41.63 லட்சத்தில் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்டுதல், ரூ.7.32 லட்சத்தில் இணைப்புச் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளன.

ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்தப் பணிகளையும் அமைச்சா் பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், செயற்பொறியாளா் ராஜா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஜவகா், சுரங்கத்துறை துணை இயக்குநா் லட்சுமிப்ரியா, நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.