/

நெல்லை அருகே இடத் தகராறு: இளைஞர் கொலை

திருநெல்வேலி அருகே இடத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

News image

நெல்லை அருகே இடத் தகராறு: இளைஞர் கொலை

Updated On :15 ஜனவரி 2021, 10:44 am


திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே இடத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(53). இவர் குடும்பத்துக்கும் பக்கத்து வீட்டில் உள்ள பாலகிருஷ்ணன்(50) குடும்பத்துக்கும் இடத்தகறாறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக வியாழக்கிழமை இரு வீட்டாருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டதாம். இதில், மாரியப்பன் மற்றும் அவரின் மகன் கிருஷ்ண சுந்தர் (21), பாலகிருஷ்ணன மற்றும் அவரது மகன் சேதுராமலிங்கம் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு கிருஷ்ண சுந்தர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து தாழையூத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இடத்தகராறு காரணமாக பொங்கல் தினத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.