கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

கூத்தாநல்லூர்: மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில் பொங்கல் விழா

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர்  மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 ஜனவரி 2021, 7:11 pm IST

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர்  மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூர் அடுத்த மேலப்பனங்காட்டாங்குடி தமிழர் தெருவில், அரசு அங்கீகாரம் பெற்ற மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளி அமைந்துள்ளது.

இப்பள்ளியில், 6 வயது முதல் 13 வயது வரையிலான மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உள்ளனர். இதே போல், சித்தாம்பூர் ஊராட்சி குடிதாங்கிச்சேரியில் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.

இரண்டு பள்ளிகளிலும், நிறுவனர் ப.முருகையன் மற்றும் ஊழியர்கள் ஏற்பாட்டின் படி பொங்கல் விழா மற்றும் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பயிற்சிப் பள்ளியின் வளாகத்தில், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் பொங்கி, படையிலிட்டு சூரிய பகவானுக்குப் படைத்து வணங்கினர்.

ஏற்பாடுகளை, கண்காணிப்பாளர் மகேஸ்வரி முருகைய்யன், பயிற்சியாளர்கள் சுரேஷ், அனுராதா, செளமியா, மகேஸ்வரி மற்றும் மேலாளர் வினோத் உள்ளிட்டோர் கவனித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.