வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் தினம் அனுசரிப்பு

விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர்  எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்தநாள் தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் தினம் அனுசரிப்பு

Updated On :17 ஜனவரி 2021, 1:21 pm IST

விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர்  எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்தநாள் தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக்குழு தலைவர் சிந்து முருகன்,ஒன்றியச் செயலாளர்கள் முத்தையா மயில்சாமி, நகரச் செயலாளர் எஸ்.எம். பாலசுப்பிரமணியம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தேரடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ளஎம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதில் மாவட்ட கவுன்சிலர் கணேசன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் தனலட்சுமி முருகன், அத்திகுளம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணி, மற்றும் மாவட்ட,நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.