சென்னையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 15 சிறப்பு குழுக்களை அமைத்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பானது அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேலும் 4276 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் அதிக பாதிப்புகளை பதிவு செய்து வரும் சென்னையில் மட்டும் 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.