தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம்: ப.சிதம்பரம் வேண்டுகோள்

தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளவது மிக முக்கியம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

News image

ப.சிதம்பரம்

Updated On :9 ஏப்ரல் 2021, 3:05 am

DIN


தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளவது மிக முக்கியம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வரும் நிலையில் ப.சிதம்பரம் தயக்கத்தை விட்டு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவுகிறது. 

எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

முகக்கவசம் முக்கியம். தடுப்பூசி போட்டுக் கொள்வது அதைவிட முக்கியம். 

தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.