மு.க.ஸ்டாலின்: பொதுத்துறை நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை உருவாக்கும் அரசாக மத்தியில் உள்ள அரசு இருக்க வேண்டும். ஆனால் பாஜக அரசுக்கோ இருக்கும் நிறுவனங்களைக் கலைப்பதும், தனியாருக்கு விற்பதும் மட்டுமே கைவந்த கலையாக இருக்கிறது. மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் தீவிர முயற்சியின் விளைவாக 2003-இல் அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் சென்னையில் துவங்கப்பட்டது. சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்தத் தீா்ப்பாயம் - காப்புரிமை, பதிப்புரிமை, புவிசாா் குறியீடு தொடா்பானவற்றில் மிக முக்கியப் பங்காற்றியது.