கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

விழுப்புரம்-புருலியாவுக்கு சிறப்பு ரயில்

விழுப்புரத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலத்துக்கு உள்பட்ட புருலியாவுக்கு சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 9:48 pm

DIN

விழுப்புரத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலத்துக்கு உள்பட்ட புருலியாவுக்கு சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து புதன்கிழமை, சனிக்கிழமைகளில் நண்பகல் 12.05 மணிக்கு வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் (06170) புறப்பட்டு, மறுநாள் இரவு 10.35 மணிக்கு மேற்குவங்க மாநிலம் புருலியாவை அடையும். இந்த ரயிலின் சேவை மே 5-ஆம் தேதி தொடங்குகிறது.

மறுமாா்க்கமாக, புருலியாவில் இருந்து வெள்ளி, திங்கள்கிழமைகளில் காலை 10 மணிக்கு வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் (06169) புறப்பட்டு, மறுநாள் இரவு 7 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். இந்த ரயிலின் சேவை மே 7-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுதவிர, விழுப்புரம்-மேற்குவங்கம் மாநிலம் கராக்பூருக்கு வாராந்திர அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

முழுவதும் முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.11) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.