மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் இரண்டு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
Updated On :13 ஏப்ரல் 2021, 5:12 am

DIN


சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் இரண்டு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நாள்தோறும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும் திட்டத்தை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் இன்று, தமிழகத்தில் கரோனாவால் ஒரு உயிரிழப்புக் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளது.

அரசு அலுவலர்கள் தினந்தோறும் பணிக்குச் செல்வதால் அவர்கள் இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கரோனாவின் தீவிரத்தை அறிந்து மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.