மானூர் அருகே பைக் மீது லாரி மோதல்: பெண் தபால் ஊழியர் பலி
மானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் தபால் ஊழியர் உயிரிழந்தார்.


மானூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் தபால் ஊழியர் உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள கோமதியாபுரம் பகுதியைச் சேர்ந்த திருவுடையான் மகள் அன்பரசி(20). இவர் அழகிய பாண்டியபுரத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவர் அழகிய பாண்டியபுரத்தில் இருந்து மானூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை வந்துகொண்டிருந்தார். இவர் மானூர் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அன்பரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மானூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அன்பரசி உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...