சென்னை உயா் நீதிமன்றத்தில் வாராகி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள வணிக வளாகங்களில் பொதுப் பயன்பாட்டுக்காக இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த பொதுப் பயன்பாட்டு இடங்களை சட்டவிரோதமாக வாடகைக்கு விடுகின்றனா். இதில் கடைகள் அமைக்கப்படுவதால், பொதுமக்களின் நடமாட்டத்துக்கு இடையூறு, அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே வணிக வளாகத்துக்குள் இருக்கும் பொதுப் பயன்பாட்டு இடங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும். பொதுப் பயன்பாட்டு இடங்களை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டும் வணிக வளாகங்களின் உரிமங்களை ரத்து செய்வதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.