கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கண்ணகி கோயிலில் விழா நடத்த கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கரோனா தொற்று பரவல் காலத்திலும் சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல, மகர ஜோதி பூஜை காலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டது

News image
கண்ணகி கோயில் (கோப்பு படம்)
Updated On :27 ஜனவரி 2024, 8:02 pm

DIN

கம்பம்: கரோனா தொற்று பரவல் காலத்திலும் சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல, மகர ஜோதி பூஜை காலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டது போல்  கண்ணகி கோயிலில் விழாவையும் நடத்தி, பக்தர்களை அனுமதிக்கவும் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்கு வந்தது.

தமிழக கேரள மாநில எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் ஆண்டிற்கு ஒரு நாள் சித்ரா பெளர்ணமி அன்று முழுநிலவு விழா கொண்டாடப்படும்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் பிரச்னையால் மங்களதேவி கண்ணகி கோயில் முழுநிலவு விழா கொண்டாடவில்லை. 

இந்தாண்டு கரோனா தொற்று பரவல் இருந்தும் சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல, மகர ஜோதி பூஜை நடைபெற்றது. 

அதைப்போல இந்த ஆண்டு வரும் ஏப்.27 -ஆம் தேதி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா நடத்த வேண்டும் என்று தேனி மாவட்டம் கூடலூரைச்சேர்ந்த பி.எஸ்.நேரு கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்காக கேரள உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கல்குவா ஆஜரானார்.

வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது, கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிமன்ற அமர்வு வரும் ஏப்.20 க்குள் (செவ்வாய்கிழமை) முடிவு தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயிலும் கண்ணகி கோயிலும் பெரியார் புலிகள் சரணாலயத்திற்குள் 20 கி.மீ.  தூர எல்லைக்குள் வருகிறது.

 இரு கோயில்களுக்குள் வித்தியாசம் காட்டக்கூடாது என்ற கருத்தை முன் நிறுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டதாக பி.எஸ். நேரு கூறினார். 

மேலும் அவர் கூறியது: சித்திரை முழுநிலவு விழா நாளன்று  கண்ணகி கோயிலும் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் மூலம் திறக்க வேண்டும் என கம்பம் மங்கல தேவி கண்ணகி அறக்கட்டளையினர், இடுக்கி, தேனி மாவட்ட ஆட்சியர்களுக்கு  மனு நேரடியாகத் கொடுத்தனர். 
ஆனால் இரண்டு ஆட்சியர்களும் பதில் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் சித்ரா பெளர்ணமி விழா வரும் ஏப்.27 ஆம் தேதி நடக்க வேண்டும். இன்னும் 10 நாள்களே உள்ளன. இரண்டு ஆண்டுகளாக கோயிலுக்குள் புதர் மண்டியிருக்கிறது. அதை சரி செய்தால் தான் கோயிலுக்குள்ளேயே போக முடியும், அதனால் வழக்கு தொடரப்பட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.