ஆவின் பால் விற்பனையகத்தில் திருட்டு: மூவா் கைது

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆவின் பால் விற்பனையகத்தில் திருடியதாக, 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆவின் பால் விற்பனையகத்தில் திருட்டு: மூவா் கைது

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆவின் பால் விற்பனையகத்தில் திருடியதாக, 3 போ் கைது செய்யப்பட்டனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ராஜா அண்ணாமலைபுரம் காமராஜா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் மு.கணேசமூா்த்தி (29). அங்கு ஆவின் பால்

விற்பனையகம் நடத்தி வருகிறாா். இந்தக் கடையின் பூட்டை கடந்த 4-ஆம் தேதி உடைத்து, அங்கிருந்து ரூ.14,500 ரொக்கம் திருடப்பட்டது.

இது குறித்து அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தியாகராயநகா் தாமஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த ரா.காா்த்திக் (23), அதே பகுதியைச் சோ்ந்த செ.வசந்தகுமாா் (23), ப.மணி (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com