கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயம்பேடு சந்தை மூடல்

கரோனா பரவலை அடுத்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2021, 8:39 am

DIN

கரோனா பரவலை அடுத்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மாதத்தின் 2-வது மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கடந்த ஆண்டு கரோனா பரவலில் கோயம்பேடு சந்தை கரோனா பரவும் இடமாக உருவெடுத்தது. இதையடுத்து சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான கோயம்பேடு சந்தையில் முன்னெச்சரிக்கையாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து மாநில அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று முதல்வர் தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.