ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு
Updated on
1 min read


ஏப்ரல் 27,28,30 -ஆம் தேதிகளில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வான ஜேஇஇ மெயின் 2021 தோ்வு, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடா்ந்து மாா்ச் மாதத்திலும் தோ்வு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தோ்வு நடைபெறும். ஒரே மாணவா் 4 முறையும் தோ்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும். 

இந்நிலையில், ஏப்ரல் 27,28,30 -ஆம் தேதிகளில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com