தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அடிப்படை வசதிகள் கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி அலுவலகத்திற்குள் காஞ்சிமரத்துறை பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

News image

அடிப்படை வசதிகள் கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை

Updated On :21 ஏப்ரல் 2021, 10:46 am

DIN

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி அலுவலகத்திற்குள் காஞ்சிமரத்துறை பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ளது, காஞ்சிமரத்துறை. இங்கு பெரும்பாலான இடங்கள் விவசாய நிலமாக இருந்தாலும் 50 க்கும் மேலான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  பல ஆண்டுகளாக சாலை, குடிதண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகள் இப்பகுதியில் இல்லை. 

இது தொடர்பாக இப் பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த இப்பகுதி பெண்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்திற்குள் வந்தனர். அங்கு தரையில் அமர்ந்து, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி எம்.பாண்டியம்மாள் தலைமையில் கோஷமிட்டனர்.  

இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், காவல் ஆய்வாளர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக மின்சார தெருவிளக்குகள், குடிநீர் குழாய்கள், அமைத்தும், சாலை அமைக்க மதிப்பீடு தயார் செய்வதாகவும் உறுதி கூறினர். அதிகாரிகள் கூறியதைத்தொடர்ந்து, முற்றுகையை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.