திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கூத்தாநல்லூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தேர்வு 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது.

News image

கூத்தாநல்லூர் ரோட்டரி சங்க புதிய தலைவர் வி.எஸ்.வெங்கடேசன் பேசுகிறார்.

Updated On :22 ஏப்ரல் 2021, 3:18 pm IST

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது.

கூத்தாநல்லூர், கம்பர் தெரு ஈ.எஸ்.ஏ.ஆர். மெட்ரிக்குலேஷன் பள்ளியில், ரோட்டரி சங்க உதவி ஆளுநர் ஜி.மனோகரன் ஏற்பாட்டின் பேரில், ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் வி.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தார். முன்னாள் உதவி ஆளுநர் கே.திருநாவுகரசு, மண்டலச் செயலாளர் ஜி.சிவக்கொழுந்து, 
மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ( தேர்வு ) சி.குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஏ.சண்முகம் வரவேற்றார். ஆலோசனைக் கூட்டத்தில், ரோட்டரி சங்கத்தின் வரலாற்றையும், உலகத்தில் போலியோவை ஒழித்தது குறித்தும், ரோட்டரி சங்கம் செய்யக் சேவைகள் குறித்தும் விவரித்து உதவி ஆளுனர் மனோகரன் பேசினார்.

ரோட்டரி சங்க நிர்வாகிகள்

ரோட்டரி சங்க நிர்வாகிகள்

தொடர்ந்து கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கத்திற்கு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கத்திற்கு, கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளரும், கல்வியாளருமான வி.எஸ்.வெங்கடேசன் தலைவராகவும், வர்த்தக சங்கச் செயலாளர் ஜெ.சுவாமிநாதன் செயலாளராகவும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஏ.சண்முகம் பொருளாளராகவும், நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி கோஸ்.அன்வர்தீன் துணைத் தலைவராகவும், தமிழக  கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர் துணைச் செயலாளராகவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

ஆதிபராசக்தி வழிபாடு மன்றச் செயலாளர் என். செல்வராஜ், சமூக ஆர்வலர்கள் எஸ்.ஐயப்பன், ஹாஜா மைதீன், மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியின் நிறுவனர் ப.முருகையன், நுகர்வோர் அமைப்பின் செயலாளர் ஆர்.கருணாநிதி, ஒய்வு பெற்ற ஆசிரியை எஸ். அகிலாண்ட பரமேஸ்வரி உள்ளிட்ட 25 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

கூத்தாநல்லூருக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகளை கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கம் மூலம் இணைந்து நிறைவேற்றலாம் என உதவி ஆளுநர் மனோகரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.