எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு: மீனவர் தலையில் குண்டு பாய்ந்தது

நாகை கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மீனவர் தலையில் குண்டு பாய்ந்தது.  

News image
தூப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர் கலைச்செல்வன்.
Updated On :2 ஆகஸ்ட் 2021, 3:38 am

DIN

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நாகை மீனவர் ஒருவர் காயமடைந்தார். 

நாகையை அடுத்த  கீச்சாங்குப்பம பகுதியை சேர்ந்தவர் கௌதமன். இவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் நாகை அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 28 ஆம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

அவர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பரப்பு அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் நாகை மீனவர்ளின் படகை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் நாகை மீனவர் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த எ. கலைச்செல்வன்(33) என்பவரின் தலையில் காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து நாகை மீனவர்கள் திங்கட்கிழமை காலை கரை திரும்பினர். உடனடியாக கலைச்செல்வன் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் நாகை மீனவர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.