சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
கரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களுக்கான மதிப்பெண்களை, பருவத் தேர்வுகளின் அடிப்படையில் கணக்கீடப்பட்டு www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மதிப்பெண் கணக்கீட்டை ஏற்காத மாணவர்கள் கரோனா பெருந்தொற்று குறைந்த பிறகு தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.