புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image

முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், விவசாய பெண் தொழிலாளர்கள்.

Updated On :4 ஆகஸ்ட் 2021, 6:55 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட கௌரவத் தலைவர் சி.எஸ். மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.வேலாயுதம், மாவட்ட துணைத்தலைவர்கள் ஆதிமூலம், சம்பத்து நாயுடு மாவட்ட அமைப்பாளர் எம்.அருண்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவர் ஆர் சுபாஷ் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் உதயகுமார் மாநில போராட்ட குழு தலைவர் என்ற பூபதி, வேலூர் மாவட்ட அமைப்பாளர் எஸ் ராம்தாஸ், கண்ணைய நாயுடு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். 

அப்போது மாவட்டத்தில் விடுபட்ட இடங்களில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த நெல்லை உலர வைத்து பாதுகாக்க போதிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், விவசாய பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.