இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மக்களைத் தேடி மருத்துவம்: எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைச்சர் நாசர் தொடக்கிவைத்தார்

ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை தொடக்கி வைத்தார்

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:50 am

DIN

ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை தொடக்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள தொளவேடு  துணை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட செல்லியம்மன் கண்டிகை கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர் குத்துவிளக்கேற்றி இன்று தொடக்கி வைத்தார். 

45 வயதுக்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம் முதலியவை கொண்டவர்களே கண்டறியப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் ஆன உதவிகளை வழங்கியும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் கொண்டவருக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் மருத்துவம் அளிக்கும் திட்டத்தையும், சிகிச்சை பெறுவதற்கு அவர்கள் வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டத்தையும் தொடக்கி வைத்தார்.

மேலும் அதன் மூலம் வீடுகளுக்கே சென்று மருத்துவம் செய்ய ஒரு வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த வாகனத்தில் ஒரு சிறப்பு செவிலியர் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோர் 24 மணி நேரமும் இருப்பார்கள் என கூறினார்

எல்லாபுரம் ஒன்றியத்தில் மொத்தம் 24 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. அவற்றில் தலா இரண்டு செவிலியர்கள் உள்ள நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இந்த வாகனம் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு வீடுகளுக்கே சென்று வயது முதியவருக்கு உதவ செயல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜ் மற்றும் பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகர் மாவட்ட ஊரக வளர்ச்சி தலைவர் உமா மகேஸ்வரி, திருவள்ளூர் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார அலுவலர் பிரபாகரன், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.