நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேலத்தில் அதிகரிக்கும் கரோனா: புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சேலத்தில் அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.9) முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

News image

சேலம் பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலை.

Updated On :8 ஆகஸ்ட் 2021, 9:53 am

DIN

சேலத்தில் அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.9) முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் கடந்த இரு தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள், மால்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் ஆகியவை நாளை முதல் வருகிற 23 ஆம் தேதி வரை மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும், ஞாயிற்றுக்கிழமை கடைகள் செயல்பட அனுமதி இல்லை. 

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்  வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாவட்டத்தின் முக்கிய கால்நடைச் சந்தைகளான கொங்கணாபுரம் வாரச் சந்தை, வீரகனூர் வாரச் சந்தை மற்றும் மேட்டூர் அணை பூங்கா ஆகியவற்றை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தலமான ஏற்காட்டுக்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.