ஈரோடு ரயில்நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஈரோடு ரயில்நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகைகள் பறிக்கக் கூடாது, ரயில் நிலையங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது, ரயில்நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் வசூலிக்கக் கூடாது, புதுச்சேரி மற்றும் சண்டிகர் மாநிலங்களில் பெட்ரோல் மானியம் வழங்குவதை போல் நாடு முழுவதும் மானியம் வழங்க வேண்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.