புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:39 am

DIN

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் காவல்துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அவர், தமிழ்நாடு காவல்துறையை மேம்படுத்தும் வகையில் 8,930.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " தீயணைப்புதுறைக்கு 405.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். காவல்துறையில் உள்ள 14,317 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். தீயணைப்பு சட்டம் முழுவதுமாக மாற்றியமைக்கப்படும்" என்றார்.

காலநிலை மாற்றம் குறித்து பேசிய அவர், "500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும். இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சுழல் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும். ஈர நிலங்கள் சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.