தமிழ்நாடு
பவானிசாகர் அணையிலிருந்து ஆக.15 முதல் தண்ணீர் திறக்க உத்தரவு
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக ஆக.15 முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக ஆக.15 முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு 15.08.2021 முதல் 12.12.2021 முடிய 120 நாட்களுக்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்கள், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.