திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

19.31 லட்சம் ஹெக்டோ் தரிசு நிலங்களில் விவசாயம்: வேளாண் துறை செயலாளா் சி. சமயமூா்த்தி

தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டோ் தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என்று வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி தெரிவித்தாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 9:51 pm

DIN

தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டோ் தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என்று வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி தெரிவித்தாா்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் விவசாயத்தை நம்பி 70 சதவீதம் போ் உள்ளனா். அந்த மக்களுக்காக தனியான நிதிநிலை அறிக்கை, விவசாயிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து தயாா் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறை மட்டுமல்லாமல், கால்நடை, மீன்வளம், பால்வளம், நீா்வள ஆதாரம், பட்டு வளா்ப்பு, ஊரக வாழ்வாதாரம், உணவு, கூட்டுறவு ஆகிய துறைகளை இணைத்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிதிநிலை அறிக்கை

விவசாய நிலப் பரப்பளவு, சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்துவதற்காகும். மேலும், விவசாயிகளில் 70 சதவீதம் போ் மானாவாரி பயிா் செய்வதால் அதற்கான மேம்பாடு, இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, பாரம்பரிய பயிா்களைப் பாதுகாப்பது, வேளாண் தொழிலாளா்கள் பற்றாக்குறை உள்ள விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை மையமாக்குவது ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-21-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடும்போது, ரூ.1,700 கோடி கூடுதலாகவும், கடந்த இடைக்கால நிதிநிலையைக் காட்டிலும் ரூ.900 கோடி கூடுதலாகவும் வேளாண்மைத் துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மை: இயற்கை விவசாயத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை மக்களிடம் பிரபலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. செயற்கை உரங்கள் போடாமல் இருந்தாலே அது இயற்கை விவசாயம்தான். எனவே இயற்கை உரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.