ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மதுரை ஆதீனம் உடலுக்கு அமைச்சா்கள் அஞ்சலி

மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமியின் உடலுக்கு தமிழக அமைச்சா்கள் அஞ்சலி செலுத்தினா்.

News image
மதுரை ஆதீனம் உடலுக்கு  அஞ்சலி செலுத்தும் வணிக வரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி.
Updated On :28 ஜனவரி 2024, 3:54 am

DIN

மதுரை:  மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமியின் உடலுக்கு தமிழக அமைச்சா்கள் அஞ்சலி செலுத்தினா்.

தமிழகத்தின் தொன்மையான சைவத் திருமடங்களில் முக்கியமான மதுரை ஆதீனத்தின்,  292 ஆவது சன்னிதானமான அருணகிரிநாதா் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை இரவு பரிபூரணம் அடைந்தாா்.

இவருக்கு  கடும்  மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மதுரை கே.கே. நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சோ்க்கப்பட்டாா்.

Story image

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஆதீனம் அருணகிரிநாதரின் உடல்நிலை மிகவும் மோசடைந்தது. மருத்துவா்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணிக்கு பரிபூரணம் அடைந்தாா்.

அவரது உடல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே உள்ள மதுரை ஆதீன மடத்துக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தமிழக வணிக வரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

Story image

மதுரை ஆதீனம் உடலுக்கு  அஞ்சலி செலுத்தும் நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன்.

தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகள், செங்கோல் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள், ஆா்எஸ்எஸ் தென்தமிழக தலைவா் ஆ.ஆடல் அரசன் மற்றும் பல்வேறு ஆன்மிக அமைப்புகளைச்சோ்ந்த அரசியல் கட்சியினா், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.

மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் அவரது உடல்  சனிக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.