விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழகத்தில் சென்னை, கோவையில் அதிக கரோனா பாதிப்பு

தமிழகத்தில் அதிக அளவாக சென்னை மற்றும் கோவையில் அதிக அளவில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது.

News image
தமிழகத்தில் சென்னை, கோவையில் அதிக கரோனா பாதிப்பு
Updated On :17 ஆகஸ்ட் 2021, 1:19 pm

DIN


தமிழகத்தில் அதிக அளவாக சென்னை மற்றும் கோவையில் அதிக அளவில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது.

சென்னையில் புதிதாக 209 பேருக்கும், கோவையில் 206 பேருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சென்னையில் கரோனா பாதிப்பு 205-ஆக இருந்தது. கடந்த மாதம் 27-ம் தேதி 139-ஆக இருந்த நிலையில், தற்போது 209-ஆக பதிவாகியுள்ளது.

சென்னையில் புதிதாக 229 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 3 பேர் உயிரிழந்தனர்.

பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 2,380 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இதுவரை மொத்தமாக 5,41,616 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.8 சதவிகிதமாக உள்ளது.

சென்னை கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 167 பேருக்கும், தஞ்சாவூரில் 121 பேருக்கும், சேலத்தில் 117 பேருக்கும், செங்கல்பட்டில் 110 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.